பாலங்கள் கட்டியதில் ஊழல்: நிரூபித்தால் தூக்கில் தொங்குவேன்- ஸ்டாலின் ஆவேசம்
வள்ளியூர்:
சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில் என் மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால் அதே மேம்பாலத்தில் தூக்குப்போட்டுத் தொங்க நான் தயார் என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் ஆவேசமாகக் கூறினார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,சென்னை மாநகராட்சி மேயராக நான் இருந்தபோது, 10 மேம்பாலங்கள் கட்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி அனுமதிவழங்கினார்.
போக்குவரத்து நெரிசல், மக்கள் நலன் ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு அந்தப் பாலங்களை கட்டினோம். இதில்பெரம்பூரைத் தவிர மற்ற பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.
ஆனால் ஆட்சி மாறியதும், முதல் வேலையாக என்னையும், கருணாநிதியையும் ஜெயலலிதா ஊழல் வழக்கைப் போட்டு உள்ளேதள்ளினார். ஆனால் இந்த வழக்கில் நான்கு ஆண்டு காலம் ஆகியும் இதுவரை குற்றப் பத்திரிக்கையைக் கூட ஜெயலலிதாவால்தாக்கல் செய்ய முடியவில்லை.
காரணம் நாங்கள் செய்ததாக கூறப்படும் புகாரை நிரூபிக்க ஜெயலலிதாவால் முடியவில்லை.
இந்த வழக்கில் என் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால், எனது பதவிக் காலத்தில் கட்டப்பட்ட அதே பாலத்தில் நான் தூக்குப்போட்டுத் தொங்கத் தயாராக இருக்கிறேன் என்றார் ஸ்டாலின் ஆவேசமாக.












Click it and Unblock the Notifications