நீதிபதி வீட்டில் போலீஸ்காரர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சர்தார் சக்காரியா உசேன் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சுந்தரம், ஆயுதப் படை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2000ம் ஆண்டுதான் இவர் பணியில்சேர்ந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் மாறுதலாகி சென்னைக்கு வந்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி சர்தார் சக்காரியா உசேனின் வீட்டில் பணியில் அமர்த்தப்பட்டார். சக காவலர்களான பாலமுருகன்,நாகராஜன், ராஜா ஆகியோருடன் மூலகொத்தளம் பகுதியில் வீடு எடுத்துத் தங்கியிருந்தார்.

இந் நிலையில் மாலை 6 மணியளவில், நீதிபதியின் வீட்டில் தனது பாதுகாப்பு அறையில் இருந்த சுந்தரம், திடீரென கையில்வைத்திருந்த 303 ரக துப்பாக்கியை தனது தொண்டையில் வைத்து சுட்டுக் கொண்டார்.

இதில் குண்டு அவரது தலையின் பின்பக்கத்தை துளைத்துக் கொண்டு வெளியேறியது. சம்பவ இடத்திலேயே சுந்தரம் இறந்துபோனார்.

குண்டு வெடித்த சப்தம் கேட்டு நீதிபதி வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது சுந்தரம் இறந்து கிடந்தது தெரிய வந்தது.காவல்துறை ஆணையர் நடராஜ், இணை ஆணையர் சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணைமேற்கொண்டனர்.

தற்கொலை செய்து கொண்ட சுந்தரம் கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை. அவருக்கு குடும்பப் பிரச்சினையாைே, காதல்பிரச்சினையோ, பணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிகிறது.

இந் நிலையில் அவர் நீதிபதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+