For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவை to

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

சுனாமி குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், இரு கைகளையும் கட்டிக் கொண்டு பாண்டிச்சேரியிலிருந்து கடலூர்வரை நீந்திச் சென்றார் புதுவையைச் சேர்ந்த வாலிபர்.

பாண்டிச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரேமானந்தன் என்கிற பிரபு. சுனாமி முதலாமாண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு, சுனாமி குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நூதன நீச்சலை மேற்கொள்ள முடிவு செய்தார்.

இதன்படி, 2 கைகளையும் கட்டிக் கொண்ட அவர் புதுவையிலிருந்து கடலூர் வரை நீச்சலடித்துச் செல்லத் திட்டமிட்டார். அதன்படிபுதுவை கடற்கரையில், காந்தி சிலை அருகே தனது நூதன விழிப்புணர்வுப் பயணத்தை தொடங்கினார்.

முதல்வர் ரங்கசாமி, பாமக எம்.எல்.ஏ. ராமதாஸ் ஆகியோர் பிரபுவின் விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடங்கி வைத்தனர். இருகைகளையும் கட்டியபடி மேலே தூக்கிக் கொண்ட பிரபு, வெறும் கால்களால் நீந்தியபடி கடலில் தனது பயணத்தைத்தொடங்கினார்.

அவரது பாதுகாப்புக்காக 2 படகுகளில் நீச்சல் வீரர்களும், மருத்துவக் குழுவினரும் சென்றனர். காலையில் தொடங்கிய பிரபுவின்சாகச பயணம் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டனம் கடற்கரையில் மாலை 6 மணியளவில் முடிவடைந்தது.

மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் வாலிபர் பிரபுவை வரவேற்றுப் பாராட்டி பொன்னாடை போர்த்திகோப்பை வழங்கி கெளரவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X