For Daily Alerts
Just In
ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி சென்னைக்கு மாற்றம்
சென்னை:
ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி எலிப்பே தர்மாராவ், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக பல நீதிபதி பதவிகள் காலியாக கிடந்தன. நீண்ட இழுபறிக்குப் பின்னர்,உச்சநீதிமன்றத்தின் கண்டிப்புக்குப் பின்னர் சமீபத்தில் 17 புதிய நீதிபதிகளை மத்திய அரசு நியமித்தது. அனைவரும் தற்போதுபணியில் சேர்ந்துள்ளனர்.
இந் நிலையில், மேலும் ஒரு நீதிபதி புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். எலிப்பே தர்மாராவ் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில்இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜனவரி 11ம் தேதிக்குள் அவர் பதவி ஏற்றுக் கொள்வார் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 28, 2005, 5:30 [IST]