கோவில்பட்டி: திமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டி கொலை
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் திமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது பாண்டவர்மங்கலம் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது40). இவர் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவராகவும் கோவில்பட்டி ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளராகவும் இருந்துவந்தார்.கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெருவில் வசித்து வந்த அவர் தீப்பெட்டி ஆலையும் நடத்தி வந்தார். மேலும் தூத்துக்குடிமாவட்ட ஹாக்கி கழகத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
காலையில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செளந்திர பாண்டியன் என்பருடன் அய்யாசாமி வழக்கம் போல் வாக்கிங் சென்றார்.அப்போது புதரில் மறைந்திருந்த 2 பேர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அய்யாசாமியை வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.
இதில் அய்யாசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்து.












Click it and Unblock the Notifications