For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுமி கொலை: குஷ்பு நேரில் ஆஜராக சம்மன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Kushboo with Sathyaraj

நட்சத்திர ஹோட்டலில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை போலீஸாருக்குத் தெரிவிக்காமல்விட்டது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராக கூறி நடிகை குஷ்புவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் சம்மன்அனுப்பியுள்ளது.

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, கொலைசெய்யப்பட்டதாக ஒரு வாரப் பத்திரிகைக்கு குஷ்பு பேட்டி அளித்திருந்தார்.

அப்போது அவர் அந்த ஹோட்டலில் இருந்துள்ளார். இதுதொடர்பாக ஏன் போலீஸில் தெரிவிக்கவில்லை என்று அவரிடம்பத்திரிக்கை நிருபர் கேட்டபோது, அதில் பெரிய இடத்து ஆட்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக குஷ்பு தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் குஷ்பு மீது சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றச் செயல்ஒன்றை தெரிந்திருந்த குஷ்பு அதை காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்து விட்டார். இது குற்றமாகும். எனவே குஷ்பு மீதுநடவடிக்கை எடுக்க வண்டும், சிறுமி கொலை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இன்று நேரில் ஆஜராக கூறி குஷ்பு, பத்திரிக்கை ஆசிரியர், நிருபர் ஆகியயோருக்கு சம்மன் அனுப்ப நீதிபதிமகாராஜன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர்களுக்கு சம்மன் அனுப்புவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் சம்மன்அனுப்பப்படவில்லை. இதை நீதிமன்றத்தில் தெரிவித்த மனுதாரரின் வழக்கறிஞர் மீண்டும் சம்மன் அனுப்ப கோரினார்.

இதை ஏற்ற நீதிபதி மூன்று பேரும் ஜனவரி 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி மீண்டும் சம்மன் அனுப்பஉத்தரவிட்டார். வழக்கு விசாரணையும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X