ராஜபக்ஷே சென்னை வருகை: அகதிகள் முகாம்களில் போலீஸ் சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே சென்னைக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார்இன்று தீவிர சோதனை நடத்தினர்.

நேற்று இந்தியா வந்த ராஜபக்ஷேவுக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது நிருபர்களிடம் பேசிய ராஜபக்ஷே, அமைதி முயற்சிகளுக்கு இந்தியா பெரும் ஆதரவு தந்து வந்தது. அந்த ஆதரவுதொடரும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த அமைதி முயற்சிகளில் இந்தியாவும்பங்கேற்க வேண்டும் என்றார்.

ஜனாதிபதி கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் பேச்சு நடத்தும் ராஜபக்ஷே, நாளை மறுநாள் கேரளா செல்கிறார்.குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு சென்னைக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பார் என்று தெரிகிறது.

அவரது சென்னை வருகையையொட்டியும், இலங்கையில் தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும்தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து கியூ பிராஞ்ச் போலீஸார் இன்று காலை திருச்சி விமான நிலையம் அருகே உள்ள கொட்டப்பட்டு அகதிகள்முகாமுக்குச் சென்று சோதனை நடத்தினர். அங்குள்ள 409 வீடுகளிலும் சோதனை நிடத்தப்பட்டது.

குடும்ப அட்டைகளைப் பரிசோதித்த போலீஸார், அதில் உள்ள அனைவரும் வீடுகளில் இருக்கிறார்களா, யாராவது முகாமைவிட்டு வெளியே சென்றிருக்கிறார்களா, வேறு யாரேனும் புதியவர்கள் வீடுகளில் தங்கியுள்ளார்களா, அபாயகரமான பொருட்கள்வீடுகளில் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தினர்.

இதேபோல சென்னை அருகே உள்ள புழல் முகாம், சேலம் அருகே உள்ள தாரமங்கலம் முகாம் ஆகியவற்றிலும் போலீஸார்சோதனை நடத்தினர்.

ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் இன்று மாலை சோதனை நடத்தப்படவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+