முருகன்- நளினியின் மகள் இந்தியா வர அனுமதி
சென்னை:
தனது மகள் இந்தியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட விடுதலைப்புலி முருகனின் மகளுக்கு விசா கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முருகன் தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, தூக்கு தண்டனை பெற்ற முருகனின் மகள் மேகரா. மேக்ராகடந்த 1998ம் ஆண்டு பாட்டியுடன் இலங்கை சென்றார். தற்போது அவருக்கு 13 வயதாகிறது.
தனது பெற்றோர்களை பார்ப்பதற்காக மேக்ரா இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் கொடுத்த விசா விண்ணப்பம்பரிசீலிக்கப்படாமல் நிவையில் வைக்கப்பட்டது. இதனால் மகளுக்கு விசா தரக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தாக்கல் செய்தார். விசா வழங்குவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
இந் நிலையில் மகளுக்கு விசா தரக் கோரி முருகன் வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். இதைத் தொடர்ந்து தற்போதுஇலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு விசா அளிக்க பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதையடுத்து 10நாட்களாக உண்ணா விரதம் இருந்த முருகன் இன்று அதை முடித்து கொண்டார்.












Click it and Unblock the Notifications