ஊட்டியில் பனி!: வெப்ப நிலை மைனஸ் 3 டிகிரி!
ஊட்டி:
ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான உறைபனி கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைமுற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் டிசம்பர் மாதத்தில் கடும் பனி கொட்டும். பெரும்பாலும் சீரோ டிகிரியை வெப்ப நிலை தொடும். ஆனால்எப்போதாவது சீரோ டிகிரிக்கும் கீழே வெப்ப நிலை போவதுண்டு.இந் நிலையில் ஊட்டி வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தற்போது கடுமையான உறைபனி கொட்டி வருகிறது. வெப்ப நிலைமைனஸ் 3 டிகிரிக்கு இறங்கி விட்டது. இதனால் பகல் நேரங்களிலும் கடுமையான குளிரும், மூடுபனியும் நிலவுகிறது. இரவில்உறைபனி கொட்டுகிறது.
உறைபனி காரணமாக புல்தரைகள், மரங்கள், செடிகளில் பனி படர்ந்து காஷ்மீர் போலக் காணப்படுகிறது. சுற்றுலாவுக்கு வந்துள்ளபயணிகள், இந்த அழகிய காட்சியைக் கண்டு மகிழ்கிறார்கள்.
அதேசமயம், உள்ளூர்வாசிகள், பெரும் கவலையுடன் காணப்படுகின்றனர். காரணம் தேயிலைச் செடிகளுக்கு பனி மிகப் பெரியஎமன் ஆகும்.
பனியிலிருந்து செடிகள் சுருங்கிப் போவதைக் காக்க வேறு பல செடிகளை வெட்டி எடுத்து வந்து தேயிலைச் செடிகள் மீது போட்டுபாதுகாக்கும் முயற்சிகளில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். தேயிலைச் செடிகள் தவிர முட்டைகோஸ், கேரட் போன்ற பயிர்களும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications