சவுதி: 5 போலீசாரை சுட்டு கொன்ற தீவிரவாதி
Subscribe to Oneindia Tamil
ரியாத்:
செளதி அரேபியாவில் 5 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடிய தீவிரவாதி பிடிபட்டான்.காரில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதி ஒருவன் ரியாத் புறநகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களைநோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் 2 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இதையடுத்து அங்கிருந்து காரில் தப்பிய அந்த தீவிரவாதி, நகரத்தின் தென் மேற்கில் முஜ்நாப் என்ற இடத்தில் செக்போஸ்ட்டில்காவலுக்கு நின்றிருந்த 3 போலீசாரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பினான்.
காரில் தப்பிய தீவிரவாதியை போலீசார் விரட்டிச் சென்றனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டு அவனை மடக்கிப் பிடித்தனர்.பிடிபட்ட தீவிரவாதியின் பெயர் முகம்மத் அப்துல் ரஹ்மான் என்று தெரிய வந்துள்ளது.
செளதியில் வெகு நாட்களாக தேடப்பட்டு வரும் 15 தீவிரவாதிகளில் இவனும் ஒருவன் என்று தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications