விஜயகாந்த் வேன் மீது தொண்டர்கள் தாக்குதல்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இரு கிராமங்களுக்கு வராமல் விஜயகாந்த் சென்றதால், ஆத்திரமடைந்தஅவரது கட்சித் தொண்டர்கள், அவரது வேன் மீது சரமாரியாகக் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். கட்சிக் கொடிகளும், பேனர்களும்கிழித்து எறியப்பட்டன.
தேசிய முற்போக்குத் திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். விருதுநகர் மாவட்டத்தின் பலவேறு ஊர்களில் அவர் 3 நாட்களாக சுற்றுப்பயணம் செய்தார்.ராஜபாளையத்தை முடித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த அவர் அங்கு பேசினார். பின்னர் மேலத்தொட்டியபட்டி,பிள்ளையார்நத்தம் ஆகிய ஊர்கள் வழியாக வத்திராயிருப்பு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே நெடுநேரம் ஆகி விட்டதால் நேரடியாக வத்திராயிருப்பு செல்ல விஜயகாந்த் முடிவு செய்தார்.
இதற்கு பிள்ளையார்நத்தம், மேலத்தொட்டியபட்டி கிராம தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எங்கள் ஊர்களுக்குள் வராமல்போகக் கூடாது. அப்படிச் செல்ல முயன்றால் நாங்கள் விட மாட்டோம் என்று கூறி விஜயகாந்த் வேனைத் தடுத்து நிறுத்தினர். சிலர்வேன் முன்பாக படுத்துக் கொண்டனர்.
நேரமாகி விட்டதால்தான், நேராக வத்திராயிருப்பு செல்வதாகவும், இன்னொரு முறை வருவதாகவும் விஜயகாந்த் கூறினார்.ஆனால் அதை தொண்டர்கள் ஏற்கவில்லை. இருப்பினும், விஜயகாந்த் வேனை பின்னால் எடுக்குமாறு கூறி அங்கிருந்துகிளம்பினார். இதைப் பார்த்த தொண்டர்கள் ஆத்திரமடைந்தனர்.
சாலையின் இரு மருங்கிலும் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிகள், பேனர்கள், டியூப் லைட்டுகளை அடித்து நொறுக்கிசேதப்படுத்தினர். அப்படியும் ஆத்திரம் தாங்காமல், சாலையில் கிடந்த சரளைக் கற்களை எடுத்து விஜயகாந்த் வேன் மீதுசரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தினார்.
இதைப் பார்த்து விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் வேன் வத்திராயிருப்பு நோக்கி வேகமாக பறந்து விட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications