சிறை கைதிகளிடம் 200 செல்போன்கள், கஞ்சா!
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கைதிகளிடம் இருந்து 200 செல்போன்கள் பிடிபட்டன. சிறையில்பாதுகாப்புக்கு உள்ள போலீசாரின் உதவியில்லாமல் இவை கைதிகளை அடைந்திருக்க வாய்ப்பேயில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 4வது பெரிய சிறைச்சாலை இது. கேப்பர் மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிறையில் அல்-உம்மாஇயக்கத்தினர் உள்பட பல முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களைப் பார்க்கவும், விதிகளை மீறி சாப்பாடு கொடுக்கவும் அடிக்கடி அல்-உம்மா ஆதரவாளர்கள் சிறைக்கு வந்து செல்வதுவழக்கம். காவலுக்கு நிற்கும் போலீசாருக்கு சம்திங் கொடுத்துவிட்டு அல்-உம்மா அமைப்பினரை அவர்களது ஆதரவாளர்கள்அடிக்கடி சந்தித்து வந்தனர்.
சாப்பாடு பொட்டலம் மூலமாக கைதிகளுக்கு செல்போன்களும் சிறைக்குள் செல்வதையும் உளவுத்துறை கண்டுபிடித்தது.
இந் நிலையில் அங்கு கடந்த இரு நாட்களாக தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் கைதிகளின் அறைகளில்இருந்து 200 செல்போன்கள் சிக்கின. மேலும் ஏராளமான போதைப் பொருட்களும் பிடிபட்டன.
இந்த செல்போன்களின் நம்பர்களுக்கு யார் யார் தொடர்பு கொண்டனர், யார் யாருடன் கைதிகள் பேசினர் என்ற விவரம்சேகரிக்கப்பட்டு வருகிறது.