வாக்காளர் பட்டியலில் கிரிமினல்களுக்கு நோ!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் போலி வாக்காளர்களைச் சேர்க்க மனுக்கள் கொடுத்தது தொடர்பாக இதுவரை 450 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி மழை, வெள்ளம்காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல்அடுத்த மாதம் 23ம் தேதியும் மற்ற மாவட்டங்களில் 12ம் தேதியும் வெளியிடப்படும்.

இறுதி வாக்காளர் பட்டியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படாத பகுதிகளில் பிப்ரவரி 1ம் தேதியும், நாகை, கடலூர்,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 21ம் தேதியும் வெளியாகும்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்போது கிரிமினல் வழக்குகளில் தேடப்படுவோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும்.இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் மார்ச் மாதம் வரை புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கும் பணிதொடங்கும்.

போலி வாக்காளர்களை சேர்த்தது தொடர்பாக இதுவரை 450 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன. யார்யார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியில் சொல்வதற்கில்லை என்றார் நரேஷ் குப்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+