பாதுகாப்பு வளையத்தில் பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனங்கள்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் நேற்று நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து இந்திய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் முன்னணி சாப்ட்வேர்நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தையடுத்து இன்று மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் தரம்சிங் ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்தில்இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் முக்கிய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ்பாதுகாப்பு தர முடிவெடுக்கப்பட்டது.தாக்குதல் நடந்த இந்திய அறிவியல் மையத்துக்கு தரம்சிங் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் தாக்குதலில் காயமடைந்துமருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களையும் பார்த்தார்.
இத் தாக்குதலையடுத்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை தீவிரமாகக் கண்காணிக்குமாறு தரம்சிங்குங்கு காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய தரம்சிங், மாநிலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதுமில்லை. எவ்வளவோ தீவிர கண்காணிப்புஇருக்கும்போதும் சில சமயங்களில் இப்படி நடந்து விடுகிறது. இத் தாக்குதலில் தீவிரவாதிகளின் கைவரிசை தெரிகிறது. தீவிரவிசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications