கருணாநிதி தலைமையில் நாளை போராட்டம்
சென்னை:
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை நடக்கவுள்ள போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிகலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் வெள்ள நிவாரணம் முறையாக வழங்கப்பட வேண்டும், எம்ஜிஆர் நகர் வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 42பேர் உயிரிழந்த சம்பவம், இது தொடர்பாக வசந்தியை பரப்பியதாக திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றைகண்டித்து வரும் 30ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தது.இதை தொடர்ந்து சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கும்போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் ஜி.கே.மணி, மதிமுகதலைவர் வைகோ, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் என் வரதராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்நல்லகண்ணு ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கவுள்ள போராட்ட கூட்டத்திற்கு திமுக பொது செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார்.இந்த போராட்டத்தின் மூலம் அதிமுக அரசுக்கு நல்ல பாடம் புகட்ட அனைத்து தொகுதிகளிலும் இருந்து ஜனநாயக கூட்டணிகட்சி தொண்டர்கள் திரண்டு போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதே போல் அதிமுக அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்நாளை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.












Click it and Unblock the Notifications