கேரள பஸ் ஸ்டிரைக்: தமிழக அரசு பேருந்து நொறுக்கப்பட்டது
நாகர்கோவில்:
கேரளாவில் அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளா செல்லும்தமிழக அரசுப் பேருந்துகள் குமரி மாவட்ட எல்லை நகரான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டுள்ளன.
அகவிலைப்படி உயர்வு கோரி கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர். இதனால் கேரள மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓடவில்லை.இந்த வேலைநிறுத்தம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துப் போக்குவரத்தும்பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நாகர்கோவிலிலிருந்து கேரளாவுக்கு சென்ற தமிழக அரசுப் பேருந்து, கேரள மாநில அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் தமிழகஅரசுப் பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பயணிகள் பெரும்பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அதேசமயம், கோவையிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துப் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இதனால்கோவை மாவட்டத்திலிருந்து வாலையாறு வழியாக கேரளாவுக்குள், தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம் போல சென்றுவருகின்றன.