For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்ஷேவின் சென்னை வருகை திடீர் ரத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னைக்கு வருவதாக இருந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள மகிந்தா ராஜபக்ஷே, வெள்ளிக்கிழமை சென்னைக்கு வருவதாக இருந்தது. முதல்வர் ஜெயலலிதாவை அவர்சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதையொட்டி சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அகதிகள் யாரும் வெளியில்நடமாடவும் தடை விதிக்கப்பட்டது.

இந் நிலையில் ராஜபக்ஷேவின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறைசெய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறுகையில், டெல்லியில் இலங்கை அதிபருக்கு நிறைய நிகழ்ச்சிகள் இருப்பதால் அவரால்திட்டமிட்டபடி சென்னைக்கு செல்ல முடியவில்லை.

எனவே அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் கேரள மாநிலம் கொச்சி மற்றும் குருவாயூர் கோவிலுக்குதிட்டமிட்டபடி செல்வார் என்றார் சர்னா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X