பாண்டிச்சேரி-50: நினைவு தபால் தலை
டெல்லி:
பிரெஞ்சு அரசிடமிருந்து புதுவை விடுதலை பெற்று 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, அதைக் கெளரவிக்கும் வகையில் தபால்தலை வெளியிடப்படுகிறது.
பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுவை, இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு 1955ம் ஆண்டு பிரெஞ்சு காலணிஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. விடுதலைக்குப் பின்னர் இந்தியாவுடன் இணைந்த புதுவை, தனி யூனியன் பிரதேசமாகசெயல்படத் தொடங்கியது.இந்தியாவின் சுதந்திர தினத்தையும், பிரெஞ்சு அரசிடமிருந்து பெற்ற சுதந்திரத்தையும் புதுவை மக்கள் ஆண்டுதோறும்மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். பிரெஞ்சு நிர்வாகத்திடமிருந்து சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆவதையொட்டி,அதைக் கெளரவிக்கும் வகையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை தபால் தலை ஒன்றை தயாரித்துள்ளது.
புதுவையின் பாரம்பரியச் சின்னமான ஆயி மண்டபத்தைக் கொண்டுள்ள இந்த தபால் தலை வெள்ளிக்கிழமைவெளியிடப்படுகிறது. இதற்கிடையே கன்னியாகுமரிக்கு வந்த புதுவை முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,புதுவை யூனியன் பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கக் கோரி மத்திய அரசை பல காலமாக வலியுறுத்தி வருகிறோம்.
விரைவில் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தப் போகிறோம். புதுவையில்ரூ. 12 கோடி மதிப்பில் காமராஜர் மணி மண்டபம் எழிலுற அமைக்கப்படும். புதுவை மாநிலத்தை குடிசைகள் இல்லாதமாநிலமாக்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்றார் ரங்கசாமி.