ஆளுநருடன் சாலை பணியாளர்கள் சந்திப்பு: மீண்டும் வேலை கோரி மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை தரக் கோரி ஆளுநர்பர்னாலாவைச் சந்தித்து இன்று மனு கொடுத்தனர்.
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட தமிழக சாலைப் பணியாளர்கள் 10,000 பேர் அதிமுக அரசு அமைந்த பின்னர் டிஸ்மிஸ்செய்யப்பட்டனர். தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி இவர்கள் கடந்த நான்கரை வருடங்களாகப் போராடிவருகின்றனர்.மீண்டும் தேர்தலே வந்துவிடும் நிலையில் இவர்களுக்கு மீண்டும் பணி தர முதல்வர் ஜெயலலிதா மறுத்துவிட்டார்.
பல்வேறு போராட்டங்களை நடத்தி முடித்து தோல்வியடைந்துவிட்ட இவர்கள் இன்று ஆளுனர் பர்னாலாவை சந்தித்தனர். சாலைப்பணியாளர்கள் சங்கத் தலைவர் சித்தையன் தலைமையில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
தங்களை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களது மனுவில் இவர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications