மிக முக்கிய பிரச்சனையில் விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது பிரசார வேன் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது கட்சித் தொண்டர்களா அல்லது அவர்களதுபோர்வையில் வந்த வேறு யாருமா என்பது குறித்து தனது கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் மதுரையில் விசாரணை நடத்தினார்.

விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் விஜயகாந்த், பல்வேறு பகுதிகளுக்கு சென்று கூட்டங்களில்பேசினார். ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அவர் அங்கிருந்து வத்திராயிருப்பு செல்ல முடிவு செய்தார்.

ஆனால் ஏற்கனவே கூறியபடி, மேலத்தொட்டியபட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய கிராமங்களுக்கு விஜயகாந்த் வந்தே ஆகவேண்டும் என்று அவரது கட்சித் தொண்டர்கள் அவரது வேன் முன்பு கூடி கோஷமிட்டனர்.

ஆனால் தனக்கு நேரமாகி விட்டதாகக் கூறிய விஜயகாந்த் அவர்களைக் கண்டுகொள்ளாமல் அங்கிருந்துகிளம்பிச் சென்றார்.இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள், விஜயகாந்த்தின் பிரசார வேன் மீது சரமாரியாக சரளைக் கற்களை வீசி தாக்குதல்நடத்தினர். கட்சிக் கொடி, பேனர்கள், டியூப் லைட்டுகளையும் அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விஜயகாந்த், தனது தேனி மாவட்ட சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு மதுரைதிரும்பினார். மதுரைக்கு சென்றவுடன், விருதுநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகள், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிநிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்தினார்.

தனது வேன் மீது கல்வீசியவர்கள் யார்? நமது கட்சியைச் சேர்ந்தவர்களா, ரசிகர்களா அல்லது வேறு ஏதேனும் அமைப்பைச்சேர்ந்தவர்களா என்பது குறித்து அவர்களிடம் விசாரித்து அறிந்தார் விஜயகாந்த்.

தாக்கியது நம்மவர்களே என்று அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+