பாஜகவில் ராம-லட்சுமணர் யார்?

Subscribe to Oneindia Tamil

மும்பை:

இனிமேல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மாஜி பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார்.

மும்பையில் நடந்து வரும் பாஜகவின் வெள்ளி விழா மாநாட்டில் இந்தக் குண்டைப் போட்டார் வாஜ்பாய்.

மேலும் அத்வானியும்-பிரமோத் மகாஜனும் ராம-லட்சுமணர்கள் போல என்று வாஜ்பாய் கருத்து தெரிவித்துள்ளதும் பாஜகவில்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாஜ்பாயும்-அத்வானியும் ராம-லட்சுமணர்கள் போல் என்று பிரமோத் மகாஜன் கூறியிருந்தார்.

பிற தலைவர்கள் அத்வானியும்-வெங்கையா நாயுடுவும் தான் ராம-லட்சுமணர்கள் என்றனர். இவர்களுக்கு இடையிலானநெருக்கத்தை மனதில் வைத்து இவ்வாறு கூறி வருகின்றனர்.

இந் நிலையில் அத்வானியும் மகாஜனும் தான் ராம லட்சுமணர்கள் என்று கூறியுள்ளதன் மூலம் வெங்கையா நாயுடு மீதான தனதுவெறுப்பை வாஜ்பாய் காட்டியுள்ளதாக அந்தக் கட்சியினர் கருதுகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவிக்க மகாஜன் மறுத்துவிட்டார். நான் இப்போது எதைச் சொன்னாலும் அதை வேறு மாதிரி நீங்கள்(நிருபர்கள்) எடுத்துக் கொள்வீர்கள் என்றார் மகாஜன்.

கட்சியின் மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் கூறுகையில், அத்வானி தனது லட்சுமணனாக வெங்கையா நாயுடுவைத் தான் தேர்வுசெய்தார். ஆனால், வாஜ்பாயோ புதிதாக ஒன்றைச் சொல்கிறார்.

கட்சியில் ஒவ்வொருவருமே லட்சுமணர்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறோம். எனக்கு லட்சுமணன் இவர் தான் (அருகில்நின்றிருந்த எம்பி அலுவாலியாவைக் காட்டி) என்றார் சுஷ்மா.

எல்லோருக்கும் ஒரு படி மேலே போன வெங்கையா நாயுடு கூறுகையில், கட்சி தான் ராம். கட்சிக்காக உழைக்க வேண்டியதுஒவ்வொருரின் கடமை. நான் லட்சுமணன் அல்ல, ஹனுமன். கட்சியில் ஏகப்பட்ட லட்சுமணர்கள், பரதர்கள், சத்ருகனர்கள்இருக்கிறார்கள். கட்சியே மிகப் பெரிய வானர சேனை தான் என்றார்.

இதற்கிடையே இனிமேல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற வாஜ்பாயின் அறிவிப்பு கட்சிக்குள் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

வாஜ்பாயின் இந்த முடிவு இப்போது தான் எனக்குத் தெரியும் என்று கூறிய அத்வானி, சில காலமாக வாஜ்பாய் உடல் நலமின்றிஇருக்கிறார். இதனால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றார்.

எதற்காக வாஜ்பாய் இவ்வாறு பேசினார், அதன் பின்னணி என்ன என்பதை அறிந்துவிட்டு கருத்துத் தெரிவிப்பதாக உபி மூத்தபாஜக தலைவப் கல்ராஜ் மிஸ்ரா கூறினார். கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜாவேல்கர், வாஜ்பாயின் கருத்து குறித்து ஏதும்கூற மறுத்துவிட்டார்.

இதற்கிடையே, பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாஜ்பாயும் அத்வானியும் கட்சியை வழி நடத்துவார்கள் எனவெங்கையா கூறியுள்ளார்.

இந்தக் குழப்பங்களுக்கு இடையே சிவசேனையில் இருந்து விலகிய பால்தாக்கரேவின் சகோதரியின் மகனான ராஜ் திடீரெனமாநாட்டுக்கு வந்து வாஜ்பாயையும் அத்வானியையும் சந்தித்துவிட்டுச் சென்றார். இதனால் பாஜக மீது பால் தாக்கரேகடுப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+