சென்னையில் 7 இடங்களுக்கு தீவிர பாதுகாப்பு: கோவை பாஜக அலுவலகத்தில் குண்டு சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை - கோவை:

பெங்களூரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து சென்னையில் தொடர்ந்து தீவிர போலீஸ் கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் எனக் கருதப்படுவதால் முக்கியஇடங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க், கிண்டியில் உள்ள ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், மீனம்பாக்கம் விமானநிலையம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் ரயில் நிலையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் ஏதாவதுஒன்றை தீவிரவாதிகள் குறி வைக்கக் கூடும் என கருதப்படுவதால் இங்கெல்லாம் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரயில், பஸ் நிலையங்களிலும் ரயில்கள், பஸ்களிலும் பயணிகளின் பைகள் தொடர்ந்து சோதனையிடப்படும். தீவிரவாதிகளைஎதிர்கொள்ளும் ஒரு போலீஸ் கமாண்டோ படை செயிண்ட் தாமஸ் மலை காவல் நிலையத்தில் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன.

நகரில் போலீசாரின் மொபைல் பார்ட்டிகளும் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றன.

பாஜக அலுவலகத்தில் சோதனை:

இதற்கிடையே கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த மிரட்டலையடுத்துஅங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

ஈரோடு ரயில்வே போலீசாரின் கையில் கிடைத்த துண்டு பிரசுரத்தில் கோவை பாஜக அலுவலகம் தகர்க்கப்படும் என்றுகூறப்பட்டிருந்தது.

இதையடுத்து கோவை மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு விரைந்த போலீசார் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டுகட்டிடம் முழுவதும் சோதனை நடத்தினர்.

மேலும் அலுவலகத்தை சுற்றி இருக்கும் மரக் கிளைகளை வெட்டவும் போலீசார் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+