கார்த்திக்: சந்தானம் மகனின் கொலை மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Karthik பார்வர்ட் பிளாக் கட்சி எம்.எல்.ஏ. சந்தானம் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக, நடிகர் கார்த்திக்குக்கு ஆதரவாகசெயல்படும், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் தினகரன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

புதுக் கட்சி தொடங்கப் போவதாக எதிர்பார்க்கப்பட்ட கார்த்திக், தற்போது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர முடிவுசெய்துள்ளார். ஆனால் மாநில பொதுச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்பட்டால்தான் கட்சியில் சேருவேன் என்றும் கார்திதக்நிபந்தனை விதித்துள்ளார்.

இதனால் தற்போது பொதுச் செயலாளராக உள்ள எம்.எல்.ஏ. சந்தானம் கொதிப்படைந்துள்ளார். கார்த்திக்குக்கு பொதுச்செயலாளர் பதவி தரக் கூடாது என்று அவர் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், அதிமுக ஜால்ராவாக மாறிவிட்ட சந்தானத்தை தலைமை கண்டுகொள்ளவில்லை. அவரைத் தூக்கிவிட்டு கார்த்திக்கைதலைமைப் பொறுப்பில் அமர்த்த அக் கட்சி முடிவு செய்துள்ளது.

இந் நிலையில் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்து வரும் தினகரன், கார்த்திக்குக்குஆதரவாக செயல்பட்டு வருவதால் அவர் மீது சந்தானம் கோபமடைந்தாகத் தெரிகிறது.

இந் நிலையில் மதுரை பிச்சை பிள்ளை சாவடி பகுதியில் உள்ள தினகரனின் வீட்டுக்கு, சந்தானத்தின் மகன் இளங்கோவன்உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அப்போது தினகரன் வீட்டில் இல்லாததால், அவரது மனைவியை மிரட்டியுள்ளனர்.

மேலும், கார்த்திக்குக்கு ஆதரவாக செயல்பட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இளங்கோவனின் மனைவி மலர்விழி கரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில்,எம்.எல்.ஏ.சந்தானம், அவரது மகன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+