இ-மெயில்: குற்றவாளியை நெருங்கும் போலீஸ்
திருநெல்வேலி :
நாடாளுமன்றத்திற்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் சென்னையிலிருந்து நெல்லை வந்துள்ள போலீஸ்குழுவினரிடம் முக்கிய தடயம் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
நெல்லையில் உள்ள இன்டர்நிெட் மையத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதுதொடர்பான வழக்கை டெல்லி போலீஸாரும், தமிழக போலீஸாரும் இணைந்து விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் இதுவரை மிகப் பெரிய அளவில் எந்தத் திருப்பமும் ஏற்படவில்லை. இன்டர்நெட் மைய ஊழியர்கள்தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் போலீஸார் மதுரை, கோவை, பெங்களூர் ஆகிய நகரங்களில் தேடுதல்வேட்டையில் இறங்கினர். ஒரு குழு கொல்கத்தாவிலும் விசாரணை நடத்தியது.
இருப்பினும் துப்பு ஏதும் கிடைக்காமல் திணறி வந்தனர் போலீஸார்.
இந் நிலையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் பாலு தலைமையில் நெல்லையில் காமிட்டுள்ள போலீஸ்குழுவினரிடம் சில முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவர்கள பிடிபடுவர் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.