திருமாவளவன் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலைக் கண்டித்தும், அதிபர் ராஜபக்ஷேவின் இந்தியப் பயணத்தைக் கண்டித்தும்விடுதலைச் சிறுத்தைகள் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இலங்கையில் ராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடப்பதாகவும், தமிழ்ப் பெண் ஒருவர் ராணுவ வீரர்களால் கற்பழித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் ராணுவத்தினர் நுழைந்து அட்டகாசம் செய்தது ஆகியவற்றைக்கண்டித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருந்தார்.ஆனால் இந்தப் போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதையடுத்து திருமாவளவன் வெளியிட்டஅறிக்கையில்,
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்து விட்டதால் ஜனவரி 3ம் தேதிக்கு போராட்டம் மாற்றப்பட்டுள்ளது.அதில், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்பவர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications