சென்னை கணித விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நடந்து வரும் அகில இந்திய கணித மேதைகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பலத்தபாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் எம்.சி.பூரி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள எஸ்.ஏ.சி. ஆடிட்டோரியத்தில் கடந்த 27ம் தேதியிலிருந்து கணித விஞ்ஞானிகளின்மாநாடு நடந்து வருகிறது. இன்றுடன் மாநாடு முடிவடைகிறது.
இந்த மாநாட்டுக்கு மிக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த 28 பேர் இந்த மாநிாட்டில்பங்கேற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பானஇடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர மாநாடு நடக்கும் ஆடிட்டோரியம், ஐ.ஐ.டி. வளாகம் ஆகியவற்றிலும் அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications