ஆயுதம் கடத்திய தமிழ்த் தீவிரவாதிக்கு சிறை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கடத்திய வழக்கில் தமிழ்த் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முத்துக்குமார் என்றபாண்டியனுக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 1996ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியிலிருந்து, விடுதலைப் புலிகளுக்கு பயங்கர ஆயுதங்கள், டீசல்போன்றவற்றை கடத்திச் செல்ல முயன்றதாக கூறி புதுக்கோட்டை பாவாணன், முத்துக்குமார் என்ற பாண்டியன், மணிகண்டன்,ராமநாதன், ரவி, செந்தில், திருச்செல்வம், மகேந்திரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்தது. நீதிபதிதர்மராஜ் தற்போது தீர்பளித்துள்ளார்.
அதில், முத்துக்குமாருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, பாவாணன் உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதானகுற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications