இயற்கை தடையும், செயற்கை தடையும்: ஜெவின் புத்தாண்டு வாழ்த்து
சென்னை:
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி தமிழக ஆளுனர் பர்னாலா, மதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.
பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு பிறக்கும் இந்த நாளில், அமைதியும், வளமும் பெருகட்டும். நாட்டின்ஒருமைப்பாட்டை உறுதி செய்ய நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், ஆங்கிலப் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழக மக்களுக்கு எனது இனியவாழ்த்துகள். வராது வந்த மாமழை என்று நாம் வரவேற்று மகிழ்ந்த வேளையில், வான்மழை ஓயாது பெய்து பெரும் பாதிப்பைஏற்படுத்தி விட்டது.
தமிழகத்தில் மழை வெள்ளம் வடிந்து, மகிழ்ச்சி வெள்ளம் பெருகச் செய்ய வேண்டியது நமது மகத்தான கடமை. தமிழகமக்களைச் சூழ்ந்த கருமேகம் அகன்று விட்டது. நவாரணப் பணிகளில் வெற்றி பெற்ற நாம், புதிய நிர்மாணப் பணிகளிலும் வெற்றிபெறுவோம்.
இயற்கைத் தடைகளை எதிர்கொள்வோம், செயற்கைத் தடைகளை தகர்ப்போம். புதிய பொறுப்புகள் நம்மை அழைக்கின்றன.வரவிருக்கும் புத்தாண்டு, புதிய வாழ்வையும், வளத்தையும், வெற்றிகளையும் வழங்கும் புத்தாண்டாக மலரட்டும் என்றுதெரிவித்துள்ளார் ஜெயலலிதா.