கனிமொழியின் கருத்தில் உடன்பாடில்லை: கருணாநிதி
சென்னை:
தனது மகள் கனிமொழியும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கும் இணைந்து தொடங்கியுள்ள கருத்து என்றஅமைப்பில் தனக்கு உடன்பாடில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்து அமைப்பின் அதன் ஆரம்பமே தவறானது என்பது எனது அபிப்பிராயம் என அவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டி:
கருத்து அமைப்பு குறித்து எனக்கு முழுமையாகத் தெரியாது. அதன் ஆரம்பமே தவறானது என்பது எனது எண்ணம். இதைகனிமொழியிடமே தெரவித்து விட்டேன். எதை வேண்டுமானாலும் கருத்தாக தெரிவிக்கலாம் என்பதை ஏற்க முடியாது. எதையும்கருத்து என்ற பெயரில் யாரும் சொல்லி விட முடியாது.
இந்த அமைப்பினர் ஒரே விஷயத்தைத்தான் கடந்த 2 மாதமாக பேசி வருகிறார்கள். கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால்எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் பற்றியெல்லாம் பேசலாம். ஆனால் இந்த அமைப்பினர் ஒரே விஷயத்தையேபேசி வருகிறார்கள்.
கற்பை கேலிக்குரியதாக்க முடியாது. அப்படி செய்தால் அதுவே கேலிக்குரிய விஷயமாகி விடும். இந்தியாவுக்கென்று,தமிழகத்திற்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது.
பண்பாட்டை அழிப்பது போல யாரும் பேசவோ, நடக்கவோ கூடாது. கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொது என்றுபாரதியார் கூறியுள்ளார். அதுவே எனது கருத்தும்.
சமீப காலமாக விஜயகாந்த் நிறையப் பேசி வருகிறார். ஆனால் அவராகப் பேசவில்லை என்று நினைக்கிறேன். சமீபத்தில் அவர்என்னை அவர் சந்தித்துப் பேசினார். ஆனால் என்ன காரணத்திற்காக அவர் என்னை சந்தித்தாரோ, அதற்காக என்னைப்பார்க்கவில்லை என்று பொய் பேசியுள்ளார். இதற்கு மேல் அவரைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது?
திமுக கூட்டணியை உடைக்க என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். என்னைப் பற்றி வைகோவிடம் எதையாவதுசொல்கிறார்கள். வைகோ காதுபட என்னைப் பற்றிய தவறான செய்தியை சேர்க்கிறார்கள். ராமதாஸ் பற்றி இல்லாததும்,பொல்லாததுமாக பேசுகிறார்கள். இப்படிச் செய்தால் கூட்டணி முறிந்து விடும் என நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் தெளிவாகஇருக்கிறோம்.
முன்பெல்லாம் காவல்துறையினர் குறித்த செய்திகளாக எது வரும் என்றால் தடியடி நடத்தினார்கள், துப்பாக்கிச் சூடுநடத்தினார்கள் என்றுதான் செய்தி வரும். ஆனால் இப்போது வழிப்பறி செய்தனர், லஞ்சப் பணம் வைத்திருந்தனர், விபச்சாரவழக்கில் சிக்கினர் என்றுதான் அதிக அளவில் செய்தி வருகிறது. மக்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications