கிருஷ்ணசாமியை பாதுகாத்த இன்ஸ்பெக்டர் மாற்றம்
சென்னை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டுகாத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் கல்குவாரி தகராறு தொடர்பாக மாடசாமி என்பவர் கடந்த 5ம் தேதி கொலைசெய்யப்பட்டார். கொலை நடந்த அன்றே கிருஷ்ணசாமி மீது புகார் கொடுக்கப்பட்டது.இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக கிருஷ்ணசாமி சேர்க்கப்பட்டார். போலீசார் அவரை தேடி வந்தனர். கொலை நடந்த மறுநாள்6ம் தேதி மதுரையில் இருந்து கிருஷ்ணசாமி ஜெட் விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலைய இன்ஸ்பெக்டர் குருசாமிகிருஷ்ணசாமியை வரவேற்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணசாமி அதன்பின்னர் தலைமறைவாகிவிட்டார்.
அவரை போலீசார் தேடிவரும் நிலையில் இன்ஸ்பெக்டர் குருசாமி, கிருஷ்ணசாமியை வரவேற்று காரில் ஏற்றி அனுப்பி வைத்ததகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. குருசாமி மட்டும் கிருஷ்ணசாமியை விமான நிலையத்தில் கைது செய்திருந்தால் 25நாட்களுக்கும் மேலாக அவரை தேடும் நிலை ஏற்பட்டிருக்காது என்று கருதிய உயர் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் குருசாமி மீதுநடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.
அதன் படி இன்ஸ்பெக்டர் குருசாமி மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது விமான நிலையஇன்ஸ்பெக்டராக விஜயகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.