குஜராத் ரயிலில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
குஜராத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் கொள்ளைக் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் பலியாயினர். மேலும் பலர்காயமடைந்தனர்.மும்பையில் இருந்து ஜெயப்பூர் சென்று கொண்டிருந்த ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் அன்-ரிசர்வ்ட் பெட்டியில் இன்று அதிகாலைஇச் சம்பவம் நடந்தது.
ரயில் ஓடிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் திடீரென எழுந்து சலீம் என்ற பயணியிடம் செல்போனைப் பறித்தது. அப்போதுசலீமும் அவரது சகோதரரும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அக் கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதில் சலீம் அந்த இடத்திலேயேபலியானார்.
மேலும் அக் கும்பல் தொடர்ந்து சுட்டதில் ஜெயின் என்ற மும்பை வாலிபரும் பலியானார். இதையடுத்து பயணிகளிடம் நகை,பணத்தைப் பறித்துக் கொண்ட அக் கும்பல் அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டது.












Click it and Unblock the Notifications