யுஏஇயில் தவித்த 35 தமிழர்கள் தாயகம் திரும்பினர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஐக்கிய அரபு எமிரேட்டில் சிக்கித் தவித்த 35 தமிழக இளைஞர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தாயகம் திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒரு ஹோட்டலில் தமிழகத்தைச் சேர்ந்த 39 இளைஞர்கள் வேலை பார்த்து வந்தனர். இந் நிலையில்அந்த ஹோட்டல் திவால் ஆகி விட்டதால், வேறு ஒரு இடத்தில் பணியில் சேர்ந்தனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சரியானஊதியம் வழங்கப்படவில்லை, அவர்களது பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனால் தாயகம் திரும்ப முடிவு செய்த அவர்களை தாயகம் திரும்ப விடாமல் எமிரேட் அதிகாரிகள் தொல்லை கொடுத்தனர்.இதனால் 39 பேரும் பல்வேறு அவதிகளுக்கு ஆளாகினர்.

இவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்குகடிதம் எழுதியிருந்தார்.

இந் நிலையில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் இ.அகமது முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் சிக்கிக் தவித்த சம்பந்தப்பட்ட 39 பேரும் உரிய காலத்திற்குப் பிறகும் அங்கு தங்கியதால்தான் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது.

அவர்களை மீட்க அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்துசம்பந்தப்பட்ட அனைவருக்கும் விதிக்கப்பட்ட அபராதத் தொகை குறைக்கப்பட்டு அவர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்க ஐக்கியஅரபு எமிரேட் அரசு ஒத்துக் கொண்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது முதல் கட்டமாக 35 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். ஒருவர் அங்கேயே தங்கி தொடர்ந்து வேலைசெய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 3 பேரும் விரைவில் தாயகம் திரும்புவர் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+