பொன்.மாணிக்கவேல் மதுரைக்கு மாற்றம்
சென்னை:
சர்ச்சைக்குரிய எஸ்.பி. பொன்.மாணிக்கவேல், மதுரை அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
செங்கை கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தபோது, கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த இரண்டுகாவலர்களை, தெருவில் இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து செமத்தியாக மொத்தி எடுத்துப் பரபரப்பூட்டியவர்பொன்.மாணிக்கவேல்.அவரது அதிரடியான நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர், ஆனால் காவல்துறையினர் அவருக்கு எதிரிகளாகமாறினர். இதனால் செங்கை கிழக்கிலிருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டார் பொன். மாணிக்கவேல்.
அங்கும் அவரது அதிரடியான ஆக்ஷன் தொடர்ந்ததால், கள்ளச்சாராய வியாபாரிகள், கந்து வட்டிக்குப் பணம் கொடுப்போர்பீதியடைந்தனர். அவரது அதிரடி வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சக அதிகாரிகள் திணறினர்.
இதில் ஓமலூர் டி.எஸ்.பி மணிரத்தினம் ரொம்பவே நொந்து போய் வீட்டை விட்டு ஓடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தசம்பவத்திற்குப் பிறகு கோவைக்கு மாற்றப்பட்டார் பொன்.மாணிக்கவேல்.
அங்கும் அவருக்கு காவல்துறையினர் ரூபத்தில் பிரச்சினை உருவானது. பொன்.மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கைகளைக்கண்டு அரண்டு போன கோவை காக்கிகள், பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக மேலிடத்தில் புகார் மேல் புகாராக அனுப்பிவந்தனர்.
இதனால் பொன்.மாணிக்கவேலை சற்று ஆறப் போடும் விதமாக, அவரைக் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் தள்ளியதுதமிழக அரசு. தற்போது அவரை மீண்டும் ஆக்ஷனில் இறக்கியுள்ளது அரசு.
மதுரை அமலாக்கப் பிரிவு எஸ்.பியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை அவர் பொறுப்பு ஏற்கிறார். மதுரைஅமலாக்கப் பிரிவில் பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பொன்.மாணிக்கவேலின் வருகையால் இந்த வழக்குகள் சூடுபிடிக்கும், மதுரை வட்டாரத்தில் அணல் பறக்கும் எனஎதிர்பார்க்கலாம்.