போலீஸ் வாக்கி டாக்கி ஏற்படுத்திய பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீஸ் வாக்கி டாக்கியில் தமிழ் ஈழம் வாழ்க என்ற கோஷம் ஒலித்ததால், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மத்தியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் தீவிரவாதத் தாக்குதல், புத்தாண்டுக் கொண்டாட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சென்னை நகரில் உள்ள ரயில்நிலையங்கள் அனைத்திலும் ரயில்வே போலீஸார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்த நிலையில் ,சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸாரின் வாக்கி டாக்கிஒன்றிலிருந்து தமிழ் ஈழம் வாழ்க என்ற கோஷம் கேட்டது. இதைக் கேட்டதும் ரயில்வே போலீஸார் பீதியடைந்தனர். பரபரப்புஏற்பட்டது.
இதே போன்ற கோஷம் சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரின்வாக்கி டாக்கிகளில் கேட்டதாக தெரிகிறது. இதில் பேசியது யார் என்ற விவரம் போலீஸாருக்குத் தெரியவில்லை.
தமிழ்த் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த யாராவது இப்படிப் பேசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்துதீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications