For Quick Alerts
For Daily Alerts
Just In
பெங்களூர் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் கைது
ஹைதராபாத்:
பெங்களூரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஹைதராபாத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த டிசம்பர் 29ம் தேதி இந்திய அறிவியல் கழகத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் டெல்லி இந்தியதொழில் நுட்ப கழகத்தை சேர்ந்த பேராசிரியர் எம்.சி.பூரி கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் குண்டடிப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக இந்திய உள்நாட்டு உளவு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில் 4 பேரைஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 4 பேரும் ஹைதராபாத்தில் உள்ள லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தைசேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றனர்.
இவர்களிடம் ஆந்திர சிறப்பு உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Sunday, January 1, 2006, 5:30 [IST]