For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடலில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 2 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

2006ம் ஆண்டு பிறப்பையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில், நேற்று முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உற்சாகக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள், கடலில் திடீரென அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்கஅங்கிருந்தவர்கள் முயன்றும் முடியவில்லை. இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இருவரது உடல்களும் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இருவரும் யார், எந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

சேலத்தில் 3 சிறுமிகள் பலி:

இதற்கிடையே, சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி அருகே உள்ள நல்லியப்புதூர் என்ற கிராமத்தில், மழை நீர் குட்டையில்விளையாடிய 3 சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர்.

தனலட்சுமி என்பவரின் மகள்கள் இந்த சிறுமிகள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் புத்தாண்டு அன்று நீரில் மூழ்கி இறந்ததுஅக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X