இலங்கை ராணுவத்தை கண்டித்து வி.சி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராணுவம் அடக்குமுறையில் ஈடுபடுவதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில்சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சென்னை மெமோரியல் ஹால் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்தலைமை தாங்கினார். பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழர் தேசிய இயக்கப் பிரகர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
ஆர்ப்பாட்டதில் திருமாவளவன் பேசுகையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் அத்துமீறலில்ஈடுபடுகிறது. தமிழ் இளைஞர்கள், பெண்கள் சித்திரவதைப்படுத்தப்படுகிறார்கள்.
தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி தமிழர்களைக் கைது செய்து இலங்கை ராணுவம் அடாவடியில் இறங்கியுள்ளது.
இதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கைக்கு இந்திய அரசு எந்தவிதமான உதவியும் செய்யக் கூடாது. ராணுவஒத்துழைப்பை மத்திய அரசு முற்றிலும் கைவிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications