திரிகோணமலையில் வெடிகுண்டு தாக்குதல்: 5 தமிழர்கள் பலி
கொழும்பு:
இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் உள்ள திரிகோணமலையில் வெடிகுண்டு தாக்குதலில் 5 தமிழர்கள் பலியாகியுள்ளனர்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வன்முறை தலைதூக்கி உள்ளது. ராணுவத்திற்கும்விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் கடந்த மாதம் மட்டும் 46க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.இந்த நிலையில் திரிகோணமலையில் நடந்த தாக்குதலில் 5 தமிழர்கள் பலியானார்கள். அங்குள்ள பெரிய கடற்கரை பகுதியில்காந்தி சிலை அருகே கூடியிருந்த தமிழர்கள் மீது சிலர் வெடிகுண்டுகளை வீசினர். பின்னர் துப்பாக்கியாலும் சரமாரியாக சுட்டனர்.இதில் 5 பேர் ரத்த வெள்ளத்தில் பலியாயினர்.
மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ராணுவத்தினர் இந்த தாக்குதலைநடத்தி இருக்கலாம் என்று தெரிகிறது. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
ஆனால் இது பற்றி ராணுவத்தினர் கூறும்போது தமிழர்கள் இந்த பகுதியில் இருந்து வெளியேறிச் செல்லும் போது அவர்கள்வைத்திருந்த குண்டுகள் வெடித்திருக்கலாம் அல்லது விடுதலைப்புலிகளே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்றுதெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு கருணா கோஷ்டியினர் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications