ஜெலாட்டின்: காட்பாடியில் கேரள போலீஸ்!
காட்பாடி:
கேரள மாநிலம் கோழிக்கோடு பஸ் நிலையத்தில் ஜெலட்டின் குச்சிகள் கிடந்தது குறித்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ளதமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையில் கேரள போலீஸார் விசாரணை நடத்தினர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் ஏராளமான பைப் வடிவிலான ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.பெருமளவில் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் தீவிரவாதிகள் சதியாக இது இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து கேரளா முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தக் குச்சிகள் அனைத்தும் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையிலில்தயாரிக்கப்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து கேரள போலீஸ் குழு அதிகாரி கீர்த்தி பாபுதலைமையில் இன்று காட்பாடி வந்தது.
காட்பாடி தொழிற்சாலையில் இந்த ஜெலட்டின் குச்சிகள் கடந்த 16ம் தேதி விற்கப்பட்டுள்ளது. இது எப்படி கோழிக்கோடு பஸ்நிலையத்துக்கு வந்தது என்பது குறித்து தொழிற்சாலை அதிகாரிகளிடம் கேரள போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு இந்த குச்சிகள் விற்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்துஅந்த நிறுவனத்திடம் விசாரணை நடத்த கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications