பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசி நகை கொள்ளை: 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் முகத்தில் திராவகத்தை வீசி நகைகளைக் கொள்ளையடித்த 4 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் கீதா. இவர் வீட்டில் தனியாகஇருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது.கீதாவின் முகத்தில் திராவகத்தை வீசிய அவர்கள் கீதா அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸார்வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கீதாவின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த திலீப் குமார், வினோத் குமார், சிவராமன், பாரத் ஆகியோர் சிக்கினர்.
அவர்களிடமிருந்து திருட்டுப் போன நகைகள் மீட்கப்பட்டன. இவர்களில் திலீப் குமார், சிவராமன் ஆகியோருக்கு சென்னையில்நடந்த வேறு இரு கொள்ளைச் சம்பவங்களிலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications