பக்ரீத்: 100 ஒட்டங்களை காக்க டிஜிபிக்கு கோரிக்கை
சென்னை:
பக்ரீத் பண்டிகையையொட்டி பலியிடப்படுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள 100 ஒட்டகங்களை காப்பாற்றுமாறு தமிழககாவல்துறை தலைவர் அலெக்சாண்டருக்கு இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அச் சங்கத்தின் தலைவர் எம்.பி. நிர்மல், டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆந்திராவிலிருந்து 100 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஒட்டகங்கள் தமிழகம்,கேரளா மற்றும் கர்நாடகவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 14 இடங்களில் இந்த ஒட்டகங்களைப் பலியிடத் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. பக்ரீத்பண்டிகையின்போது இவ்வாறு ஒட்டகங்களைப் பலியிடுவதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எனவே, தமிழகத்திலும் ஒட்டகப் பலியை நிறுத்த டிஜிபியான தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நிர்மல்.
இதேபோன்ற கடிதத்தை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், கால்நடைத்துறைச் செயலாளர் ஆகியோருக்கும்நிர்மல் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications