ஹெராயின்: இலங்கை வாலிபருக்கு 11 வருட சிறை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
போதைப் பொருள் கடத்திய வழக்கில் இலங்கையைச் சேர்ந்த வாலிபருக்கு 11 வருடம் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டைநீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.இலங்கை வல்வத்தையை சேர்ந்த வெற்றியரசு என்பவரின் மகன் வெற்றிச் செல்வன் (வயது 35). இவர் கடந்த 2004ம் ஆண்டுசென்னையில் இருந்த திருச்சிக்கு விமானத்தில் வந்தார். அங்கிருந்து காரில் சென்ற இவரை திருச்சி செக்போஸ்டில் போலீசார்சோதனை செய்தனர்.
அப்போது அவரிடமிருந்து ரூ. 11 கோடி மதிப்புள்ள 11 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகபுதுக்கோட்டை போதைப்பொருள் தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குதொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலசுந்தரகுமார் வெற்றிச் செல்வனுக்கு 11 வருட சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும்விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.












Click it and Unblock the Notifications