மெக்கா: கட்டட விபத்தில் இந்தியர் உள்பட 34 பேர் பலி
மெக்கா:
மெக்காவில் எட்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் புனிதப் பயணம் மேற்கொண்ட 34 யாத்ரீகர்கள் பலியாயினர். அதில்ஒருவர் காஷ்மீரைச் சேர்ந்தவர் ஆவார்.
உலக நாடுகள் அனைத்திலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஹஜ் யாத்திரைக்காக மெக்காவில் குவிந்துள்ளனர். அவர்கள்பல்வேறு கட்டடங்கள், கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் லூலூ அல்-கயர் என் எட்டு மாடி விடுதிக் கட்டடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் 34 பேர் பலியாயினர்.இச் சம்பவம் நடந்தபோது இதில் தங்கியிருந்த பெரும்பாலான யாத்ரீகர்கள் வெளியே சென்றிருந்தனர்.
இதனால் பெரும் எண்ணிக்கையிலான உயிர்ப் பலிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்து,துனீசியா, யுஏஇ, இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் ஒரு இந்தியரும் அடக்கம். காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மத் ரஜப் ராதர் என்பவரும் இந்த கட்டடவிபத்தில் பலியானார்.
இதற்கிடையே இந்த இடிபாடுகளில் சிக்கி 80 பேர் வரை பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள்தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications