ஒசூர் அருகே யானைகள் அட்டகாசம்: விவசாயி மிதிபட்டு சாவு
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காட்டு யானை மிதித்து விவசாயி ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.
ஓசூர் அருகே உள்ள தளி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ளகிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி நாசம் விளைவித்து வருகின்றன. யானைகளைக் கட்டுப்படுத்தவனத்துறையிடம் பலமுறை கிராமவாசிகள் புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந் நிலையில் தாசரஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு விவசாயிகள், தங்களது நிலங்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தியது.
இதில் நாராயண ரெட்டி என்பவர் யானை மிதித்ததில் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் ஒருவர் படுகாயம்அடைந்தார். மற்ற இருவரும் லேசான காயமடைந்தனர்.
யானை மிதித்து விவசாயி இறந்ததால் ஆத்திரமடைந்த தாசரஹள்ளி கிராமத்தினர் நாராயண ரெட்டியின் உடலை எடுத்துக்கொண்டு வனத்துறை சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் தலையிட்டு அவர்களைசமாதானப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications