கொடைக்கானலில் வெப்ப நிலை பூஜ்யம்!!
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் வெப்ப நிலை பூஜ்யம் டிகிரியைத் தொட்டுள்ளது. இதனால்மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மலைகளின் ராணியான ஊட்டி, கடும் குளிரில் உறைந்து கிடக்கிறது. மைனஸ் 3 டிகிரி வரை அங்கு வெப்ப நிலை நிலவுவதால்கடும் குளிரும், உறைபனியுமாக ஊட்டியே நடுங்கிக் கிடக்கிறது.இந் நிலையில் கொடைக்கானலும் கடும் குளிரையும், பனியையும் சந்தித்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜ்யம்டிகிரியை வெப்பநிலை தொட்டுள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு மேல்தான் வீடுகளை விட்டுவெளியே வரவே முடிகிறது.
கடும் உறைபனியும், குளிரும் நிலவுவதால் பகலில் கூட மக்களால் ஸ்வெட்டர், கம்பளி உடைகளை அணியாமல் நடமாடமுடியவில்லை.
கடும் குளிரிலிருந்து தப்புவதற்காக ஆங்காங்கே அனல் மூட்டி மக்கள் குளிர் காய்ந்து தங்களை சூடுபடுத்திக் கொள்கிறார்கள்.சீசன் இல்லாத இந்த நிலையிலும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்குவந்தவண்ணம் தான் உள்ளனர்.