For Quick Alerts
For Daily Alerts
Just In
கொழும்பில் இந்திய பொறியாளர் சுட்டுக் கொலை
கொழும்பு:
ஹைதராபாத்தைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவர் இலங்கை தலைநகர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துர்கா பிரசாத் (வயது 30) என்ற அந்த ஆந்திர வாலிபர் ஆஸ்டர் கம்யூனிகேசன்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இலங்கை மொபைல் நிறுவனம் ஒன்றுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்க அவர் கொழும்பு வந்தார். டெகிவேலா என்ற இடத்தில்ஒரு அறையில் தங்கி இருந்தார்.
இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு உணவு வாங்குவதற்காக அந்தப் பகுதியில் சென்றபோது மர்ம நபர்களால் அவர்சுடப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றிஅவர் இறந்தார்.
அவரை யார், எதற்காகக் கொன்றனர் என்று தெரியவில்லை.
Comments
Story first published: Friday, January 6, 2006, 5:30 [IST]