For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சையில் தீவிரவாதிகள் பதுங்கல்?: கர்நாடக தனிப்படை வேட்டை- மதுரையிலும் தேடுதல்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

பெங்களூர்த் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சில தீவிரவாதிகள் தஞ்சாவூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்துள்ள தகவலின்அடிப்படையில் கர்நாடக போலீஸ் தனிப்படை அங்கு முகாமிட்டு தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

பெங்களூரில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கர்நாடக போலீஸார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர். இதில் ஆந்திராவில் அப்துல் ரஹ்மான் என்பவரும், சென்னையில் பஷீர் என்பவரும் போலீஸ் பிடியில்சிக்கினர்.

ரஹ்மான் கொடுத்த தகவலின் பேரில் பஷீரைப் பிடித்த போலீஸார் தற்போது அவரை பெங்களூருக்குக் கொண்டு சென்றுவிசாரித்து வருகிறார்கள். இந் நிலையில் ரஹ்மான் மூலம் கிடைத்த மற்றொரு தகவலின் அடிப்படையில் தஞ்சையில் சிலதீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கர்நாடக தனிப்படை போலீஸார் தஞ்சை விரைந்தனர். அங்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்செந்தாமரைக் கண்ணனுடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தஞ்சையில் உள்ள பல்வேறு லாட்ஜுகள்,சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் தீவிர வேட்டை நடந்து வருகிறது.

ரயில் நிலையத்திலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சை நகர எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. மாறு வேடத்திலும் போலீஸார் தேடுதல் வேட்டையில் தீவிரமாகஇறங்கியுள்ளனர். தஞ்சை போலீஸாரும் இந்த வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளிடம் பயங்கர வெடிபொருட்கள் இருப்பதாகக் கருதப்படுவதால் வெடிகுண்டு நிபுணர்களையும்உடன் அழைத்துக் கொண்டு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல மேலும் இரு கர்நாடக போலீஸ் குழுக்கள் மதுரை மற்றும் புனேவுக்கும் விரைந்துள்ளன.

பெங்களூர்த் தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதிகள் நான்கு பிரிவுகளாக பிரிந்து சென்னை, தஞ்சை, மதுரை, புனேவுக்குச் சென்றுவிட்டதாக ரஹ்மான் தெரிவித்துள்ளதாக கர்நாடக போலீஸார் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X