ரூ. 600 கோடி மோசடி: வங்கி அதிகாரி கைது
மதுரை:
போலி ஆவணங்களை காட்டி ரூ. 600 கோடிக்கு வங்கி உத்தரவாதம் கேட்ட, மும்பையை சேர்ந்த போலி நிறுவனஇயக்குனர்களுக்கு சிபாரிசு செய்ததாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் மேலாளரை மதுரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மதுரை குற்றப் பிரிவு போலீசார் கூறியதாவது:மும்பையை சேர்ந்த விக்சன் டேடா டெக்னாலஜி என்ற நிறுவனத்தை சேர்ந்த இயக்குனர்களாகிய பிரதீப் கே.உகடா, முகமது ரபிக்,முகமது பிக்ஷா வாலா மற்றும் தனுஜா ஆகியோர் மதுரை ஐசிஐசிஐ வங்கி மேலாளர் சதாசிவத்தை அணுகி, சில பத்திரங்களைகாட்டி, தங்களுக்கு மும்பை மட்டுமின்றி சிவகாசியிலும் சொந்த நிறுவனம் உள்ளதாகவும்,
மேலும் தாங்கள் மதுரையில் வீடுகள் கட்டும் திட்டத்திற்காக, கனடா நாட்டில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்திடம் நிதியுதவிபெறவிருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர். எனவே தங்களுக்கு இந்த பத்திரங்களின் அடிப்படையில் வங்கி உத்தரவாதம் தரவேண்டும் என்று கேட்டுள்ளனர். இதை ஏற்று வங்கி மேலாளர் சதாசிவமும் அவர்களுக்கு உத்தரவாதம் கொடுக்க சிபாரிசுசெய்துள்ளார்.
இது குறித்து கனடா நிறுவனத்தை வங்கியின் மூத்த அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது வீடு கட்டும் திட்டத்திற்காக எங்களிடம்எந்த நிறுவனமும் நிதியுதவி கேட்கவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் விசாரணை நடத்தியதில் மும்பையில் விக்சன் டேடா என்ற பெயரில் எந்த நிறுவனமும் இல்லை என்றும், அவர்கள் அளித்தபத்திரங்கள் எல்லாம் போலியானது என்றும் தெரியவந்தது.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் துவக்கினர். அப்போதுவங்கியின் முன்னாள் மேலாளர் சதாசிவம் தனது அதிகாரத்தை மீறி போலி ஆவணங்களுக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க சிபாரிசுசெய்திருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கும், மும்பை ஆட்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார்அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாகிவிட்ட மும்பையை சேர்ந்த போலி நிறுவன இயக்குனர்களை போலீசார்தீவிரமாக தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications