For Daily Alerts
Just In
கமிஷனர் அலுவலகத்தில் டீ விற்க தடை
சென்னை:
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டீ விற்கும் சிறுவர்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகள், போலீசார் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.அவர்களுக்கு டீ மற்றும் சிற்றுண்டிகளை அருகில் உள்ள டீக்கடை சிறுவர்கள் எடுத்து வந்து கொடுப்பர்.இந்த நிலையில் கமிஷர் அலுவலகத்தில் டீ மற்றும் சுண்டல் கொண்டு வந்து விற்கக் கூடாது என்று கமிஷனர் தீடீர்உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கமிஷனர் நடராஜ் கூறியதாவது:
காவல் துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ஏற்கனவே 2 டீ கேன்டின்கள் உள்ளன. குறைந்த விலையில் டீ விற்கப்படுகிறது.மேலும் ஆவின் பாலகமும் உள்ளது. எனவே தான் இதர டீக்காரர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன்.
அவர்களுக்கு அடையாள அட்டை எதுவும் கிடையாது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Story first published: Saturday, January 7, 2006, 5:30 [IST]