மெக்கா: 3 இந்தியர்கள் உள்பட 76 பேர் பலி
மெக்கா:
மெக்காவில் எட்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியான ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இதில்3 இந்தியர்களும் அடக்கம். இவர்களைத் தவிர மேலும் 3 இந்தியர்களைக் காணவில்லை.
உலக நாடுகள் அனைத்திலும் இருந்தும் சுமார் 10 லட்சம் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரைக்காக மெக்காவில் குவிந்துள்ளனர்.அவர்கள் பல்வேறு கட்டடங்கள், கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.லூலூ அல்-கயர் என் எட்டு மாடி விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்தனர். முதலில் உயிரிழந்தோர்எண்ணிக்கை 20 என்று கூறப்பட்டது. ஆனால், இடிபாடுகளை அகற்றியபோது 76 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதில் மூன்று இந்தியர்களின் உடல்களும் அடக்கம். அவர்களது பெயர் விவரம்:
1. முகம்மக் ரஜப் ராதர் (வயது 70), புத்காம் மாவட்டம், காஷ்மீர்
2. குலாம காதிர் மீர் (47), அனந்த்நாக் மாவட்டம், காஷ்மீர்
3. முகம்மத் முஸ்தபா (62), கொல்கத்தா
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்து, துனீசியா, யுஏஇ, இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இந்த கட்டட விபத்தில் மேலும் 62 பேர் காயமடைந்துள்ளனர்.
இந் நிலையில் கட்டட விபத்து நடந்த பகுதியில் நடமாடிய மேலும் 3 இந்தியர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.அவர்களைத் தேடும் பணி நடக்கிறது.